Mai 17, 2024

இலங்கையில அமைச்சர்களும் வறுமையில்?

நாமலின் திருமண மின் கட்டணம் 22 இலட்சத்தை ஒரேநாளில் செலுத்திய அமைச்சர் தான் வறுமையில் வாடுவதாக தெரிவித்துள்ளார்.

 அமைச்சர்களுக்கான போதியளவு வசதிகள் இல்லை என இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தெரிவித்துள்ளார்.

அத்தோடு, அமைச்சர்களின் உத்தியோகபூர்வ காரைப் பராமரிப்பதற்குக் கூட அமைச்சுக்களில் பணமில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் அவர், கடந்த அரசாங்கங்களின் போது அமைச்சர்களுக்கு சலுகைகள் இருந்ததாகவும், ஆனால் தற்போதைய அமைச்சர்கள் மிகவும் சிரமமான வாழ்க்கையை வாழ்ந்து வருவதாகவும் தாம் கேள்விப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆனாலும், இந்த நாட்டு மக்களுக்காகவும் எதிர்கால சந்ததியினருக்காகவும் அந்த கஷ்டங்களை தாங்குவேன் என்றும் தற்போதைய அமைச்சர்கள் நாட்டை கட்டியெழுப்புவதற்காக தமது வாழ்வை அர்ப்பணிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.   

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert