Mai 9, 2024

சுடலையில் பாகுபாடாம்?

மட்டக்களப்பில் கால்நடை மேய்ச்சல் தரை விவகாரம் நாளுக்கு நாள் முனைப்படைந்துவருகின்ற நிலையில் இருதயபுரம் மயான விவகாரம் புதிதாக சூடுபிடித்துள்ளது.

இதனிடையே அனைத்து தமிழர்களையும் வெட்டுவேன், என்ன செய்கிறார்கள் எனப் பார்ப்போம் என்று மட்டக்களப்பு மங்களாராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட இருதயபுரம் பகுதிக்கு இன்று(25) மாலை சென்ற அம்பிட்டிய சுமனரத்ன தேரர், தமிழர்கள் மற்றும் தமிழ் அரசியல்வாதிகள் உள்ளிட்டோரை கடும் தொனியில்  எச்சரித்துள்ளார்.

இருதயபுரம் கிழக்கு பகுதியில் உள்ள சிங்கள மக்களது மயானம் கனரக வாகன மூலம் துப்புரவு செய்யப்பட்டுள்ளது.

எனினும் தனது தாயாரின் சமாதி அப்பகுதியில் அமைந்திருப்பதாகவும் அதனை அழிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் சுமனரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

எனது தாயின் சமாதிக்கு அடுத்ததாக இந்துக்களின் மயானம் உள்ளது. அதனை தாண்டி கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களின் மயானங்கள் உள்ளன.

ஏன் அவற்றை எவரும் கனரக இயந்திரங்களை கொண்டு சுத்தம் செய்யவில்லை? ஏன் சிங்களவர்களின் மயானத்தை மாத்திரம் சுத்தம் செய்கிறீர்கள்? அவ்வாறாக முன்னெடுக்கப்படும் இனவாத செயற்பாடுகள் உடனடியாக நிறுத்தப்படாவிட்டால் கிழக்கிலுள்ள அனைத்து தமிழர்களையும் சிங்களவர்கள் வெட்டுவார்கள் என தேரர் தெரிவித்துள்ளார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert