Mai 2, 2024

சாந்தன் உடல்நிலை மோசம்:குடும்பத்தினர் உறுதிப்படுத்தினர்!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலையாகி தற்போது திருச்சி சிறைமுகாமில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் சாந்தனின் உடல்நிலை மோசமடைந்துள்ளதாக குடும்பத்தினர் யாழ்ப்பாணத்தில் உறுதிப்படுத்தியுள்ளனர்.

சாந்தனிற்கு கல்லீரல் சிறுநீரகபாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தமிழகத்தை சேர்ந்த சிறைக்கைதிகள் உரிமை மையம் முன்னதாக அறிவித்திருந்தது.

திருச்சி சிறப்பு முகாமில் சாந்தனிற்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை அதனால் அவரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது அதனால் சென்னை பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை வழங்கவேண்டும் என சிறைக்கைதிகள் உரிமை மையம்  தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளது.

இந்நிலையில் யாழ்ப்பாணத்தின் உடுப்பிட்டியிலுள்ள சாந்தனின் வயோதிப தாயார் மற்றும் குடும்பத்தவர்கள் தகவலை உறுதிப்படுத்தியுள்ளனர்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று தற்போது விடுதலையான சாந்தன் இலங்கைக்கு திரும்புவதற்கான அனுமதியை இந்திய அரசு மறுதலித்துவருகின்றது.

சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் கால்கல் வீங்கியுள்ளன கல்லீரலும் பாதிக்கப்பட்டுள்ளது.எனினும் இரண்டுமாதங்களாக உரிய சிகிச்சைகள் வழங்கப்படவில்லை அதனால் அவர் உயிருக்கு போராடுகின்றார் என்பதால்  அவரை காப்பாற்றவேண்டும் என சிறைக்கைதிகள் மையம் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert