Mai 4, 2024

நெதர்லாந்தில் சிறப்பாக நடைபெற்ற அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப்பேரவையின் பொதுத்தேர்வு 2023

அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டு பேரவையினரால்  ஆண்டு தோறும் நடாத்தப்படும் அனைத்துலக தமிழ் மொழி தேர்வு  நெதர்லாந்தில்  யூன் 3 ம் நாள் 2023 சனிக்கிழமை காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணிக்கு சிறப்பாக நடந்து முடிந்துள்ளது .நெதர்லாந்தில்  மூன்று தேர்வுநிலையங்களில் பல பாகங்களிலும் இருந்தும் 200 க்கு மோற்பட்ட தேர்வுநாடிகள் ஆர்வத்துடன் பங்கு பற்றியிருந்தார்கள். 

பிள்ளைகளை தமிழ்மொழித்தேர்வில் பங்குபற்ற உதவிய பெற்றோர்கள், தமிழ்ப்பள்ளி நிர்வாகிகள் , கல்விப்பணியாளர்கள் ,ஆசிரியர்கள் அனைவருக்கும் நெதர்லாந்து திருவள்ளுவர் தமிழ்க்கல்வி கலைக்கழகம் நன்றியையும், பாரட்டுக்ளையும் தெரிவித்துக்கொள்கிறது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert