Mai 11, 2024

ஆவா அருணுடன் நின்றவர்கள் யார்?

இலங்கை புலனாய்வு துறையின் வழிநடத்தலில் ஆவா குழு அருணை முன்னிறுத்தி நல்லூரில் முன்னெடுக்கப்படும் போலி கவனயீர்ப்பு போராட்டத்தில முண்டுகொடுத்த பெண்கள் யார் என்பது அம்பலமாகியது.

தமிழ் தரப்புக்கள் முன்னெடுக்கின்ற போராட்டங்களிற்கு எதிராக மீண்டும் தாமும் போலி போராட்டங்களை நடத்துவது சிங்கள ஆட்சியாளர்களது உத்தியாகியுள்ளது.

பொத்துவில் முதல் பொலிகண்டி பேரணிக்கு போட்டியாக தெய்வேந்திரமுனை முதல் பருத்தித்துறை வரை பேரணியொன்றை நடத்த அரசு இத்தகைய கும்பலை வைத்து முயன்றபோதும் அது பிசுபிசுத்திருந்தது.

குடைசியில் யாழ்.நகரிலுள்ள நாகவிகாரையிலிருந்து புறப்பட்ட அவர்களது ஊர்வலம் கண்டுகொள்ளப்படவில்லை.

இந்நிலையில் மீண்டும் நல்லூர் பின்வீதியில் புலிகளால் கடத்தப்பட்டவர்களை தேடுவதாக இன்றைய தினம் இராணுவம் கொட்டகை அமைத்து வழங்க போராட்டமொன்று பத்திற்கும் குறைவானவர்களை வைத்து நடத்தப்பட்டிருந்தது.

இத்தகைய போராட்டத்தில் ஆவா அருணுடன் நின்ற பெண்கள் யார் என்பது அம்பலமாகியுள்ளது.

படைகளது சலுகைகளை பெற்று திரியும் கும்பல் ஒன்றே இதுவென்பது அம்பலமாகியுள்ளது.