März 28, 2025

ரணில் – தமிழ் கட்சிகள் நாளை சந்திப்பு!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் தமிழ் கட்சிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று நாளை மறுதினம் இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் நாளை மறுதினம் மாலை 5.30 மணியளவில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி உள்ளிட்ட தமிழ் தேசிய கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும் இந்த சந்திப்பு தொடர்பில் அழைப்பு விடுக்கப்பட்டதாக அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்தார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert