März 28, 2025

அரச வைத்தியசாலைகளில் மருந்துகளே இல்லை?

இலங்கையில் தற்போது, பெரும்பாலான அரச வைத்தியசாலைகளில் 90இற்கும் மேற்பட்ட அத்தியாவசிய மருந்துகளுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுவதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சங்கத்தின் செயலாளர் வைத்திய கலாநிதி ஹரித அலுத்கே, நாட்டில் உள்ள வைத்தியசாலை வலையமைப்பு பற்றாக்குறை காரணமாக வீழ்ச்சியடையும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert