März 28, 2025

தமிழீழ விடுதலைப்புலிகளால் பாதுகாக்கப்பட்ட தமிழர்களின் ஒழுக்கங்கள் திட்டமிட்டு அழிப்பு

தமிழீழ விடுதலைப்புலிகளால் பாதுகாக்கப்பட்ட தமிழர்களின் ஒழுக்கங்கள் திட்டமிட்டு அழிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் வருமானத்தை ஈட்டித்தரும் பல தொழிற்சாலைகள் தமிழர் பகுதியில் காணப்படுகின்ற நிலையில், அவை முற்றாக அழிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அங்கு வாழும் மக்களின் வாழ்வாதாரமும் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.இந்த மனநிலை மாறி தொழிற்சாலைகள் மீள உருவாக வேண்டும்.

அவ்வாறு செயற்படாத பட்சத்தில் இந்த நாடு மேலும் பின்னடைவை சந்திப்பதை தடுக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert