April 30, 2024

நாமலிற்கு சந்தேகம்!

நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து  நாமல் ராஜபக்ஷ அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

“பொது மக்களில் ஒரு பகுதியினர் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்துவதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். ஆளும் கூட்டணி பிளவுபட்டு பெரும்பான்மையை உருவாக்க முயல்கிறது, அதே வேளை நாடு பாதிக்கப்பட்டுள்ளது” என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ட்வீட் செய்துள்ளார்.

“நாங்கள் உண்மையில் கையில் உள்ள பிரச்சினைகளை எதிர்கொள்கிறோமா அல்லது வெவ்வேறு நிகழ்ச்சி நிரல்களில் பிஸியாக இருக்கிறோமா?” என முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ கேள்வியும் எழுப்பியுள்ளார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert