März 28, 2025

உக்ரைனில் தீவிரமடையும் தாக்குதல்கள்: 352 பொதுமக்கள் பலி!!

உக்ரைன் மீதான ரஷ்யத் தாக்குதலில் உக்ரைனில் இதுவரை  14 குழந்தைகள் உட்பட, 352 பொதுமக்கள் பலியாகி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இன்று 5வது நாளாக போர் தீவிரமடைந்து வரும் நிலையில், இதுவரை  14 குழந்தைகள் உட்பட, 352 பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன், 116 குழந்தைகள் உட்பட 1,684 பேர் காயமடைந்துள்ளதாகவும் உக்ரைன் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

ஆனால் உக்ரைனின் ஆயுதப்படையினரின் உயிரிழப்புகள் குறித்து எந்த தகவலையும் உக்ரைன் உள்துறை அமைச்சகம் தெரிவிக்கவில்லை.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert