März 28, 2025

கொழும்பில் முஸ்லீம்களிற்கு ஆதரவாக போராட்டம்?

கோரொனா தொற்றில் உயிரிழக்கும் முஸ்லீ;களது ஜனாசாக்களை எரிப்பது தொடர்பான விபரம் கோத்தா அரசிற்கான தலையிடியாக மாறி வருகின்றது.

இன்றைய தினம் அதனை கண்டித்து கொழும்பு பொரளை கனத்தை மயானத்துக்கு எதிரில் „கட்டாய தகனத்துக்கு“ எதிரான போராட்டமொன்றை சிவில் அமைப்புக்கள் முன்னெடுத்துள்ளன.

ஏற்கனவே கிறீஸ்தவ மததலைவர்கள் முஸ்லீம்களிற்கு ஆதரவாக குரல் கொடுத்திருந்த நிலையில் எதிர்கட்சிகளும் இணைந்து போராட்டத்தை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.