Mai 19, 2024

இலங்கை ஆயிரத்தை தாண்டலாம்?

கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக நேற்று (18) 11 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து தொற்றாளர்களின் எண்ணிக்கை 992 ஆக அதிகரித்துள்ளதாக, தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
424 பேர் தொடர்ந்தும் பல வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருவதுடன், 540 பேர் பூரண குணமடைந்து வெளியேறியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.