September 19, 2024

தமிழரசுக்கு சஜித் நன்றி தெரிவித்துள்ளார்!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் இலங்கை தமிழரசு கட்சி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவை ஆதரிப்பதாக தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளமைக்கு சஜித் நன்றி தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலிருந்து தனது எக்ஸ் தளத்தில் இன்று மாலை சஜித் நன்றி தெரிவித்துள்ளார்.

அதேவேளை பொது வேட்பாளரை ஆதரிப்பதில்லை எனவும் பொதுவேட்பாளர் நிலையில் இருந்து பா. அரிய நேத்திரனை விலக கோரவும் தீர்மானம் இன்றைய வவுனியா கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert