September 19, 2024

ரணிலுக்கு டெலோ ஆதரவில்லையாம்!

எமது கட்சி தமிழ்ப் பொது வேட்பாளருக்கான ஆதரவு நிலைப்பாட்டில் தொடர்ந்தும் உள்ளது என்று தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஊடகப் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

„தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பின் ஊடாக தமிழ்ப் பொது வேட்பாளராக அரியநேத்திரன் போட்டியிடுகின்ற நிலையில் நமது ஆதரவை வழங்கியிருந்தோம்.

இந்நிலையில், தெற்கிலிருந்து ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடுகின்ற ரணில் விக்கிரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாஸ ஆகியோரிடம் இருந்து பேச்சுக்கு வருமாறு அழைப்புகள் கிடைத்தன.

அவர்கள் இருவரையும் நாங்கள் சந்தித்தோம். அதற்கான காரணங்களையும் தெளிவுபடுத்தியிருந்தோம். அதாவது எமது பொது வேட்பாளரின் கொள்கை தொடர்பில் ரணிலிடமும், சஜித்திடமும் தெளிவாகக் கூறினோம். அவர்களும் அதனை ஏற்றார்கள்.

ஆனால், அவர்கள் தமக்கு ஆதரவு வழங்குமாறு கேட்கவில்லை. அது உங்கள் ஜனநாயக உரிமை, உங்களுடைய கோரிக்கை தொடர்பில் நாம் கரிசனை செலுத்துகின்றோம் என்று அவர்கள் தனித்தனியே தெரிவித்தார்கள்.

எனினும் சந்திப்பின் பின்னர் ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு நாம் ஆதரவு வழங்கப் போவதாகச் பிரச்சாரங்கள் செய்யப்படுகின்றன.

இதனிடையே தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்னும் ஓரிரு தினங்களில் வெளியிடப்படும் என தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பு தெரிவித்துள்ளது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert