Mai 12, 2025

தையிட்டியில் காணி அளவீடு தடுத்து நிறுத்தம்

யாழ்.தையிட்டியில் முன்னெடுக்கப்பட இருந்த காணி அளவீட்டுப்பணி  தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

காணி அளவீட்டு பணிகள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை முன்னெடுக்கப்பட இருந்த நிலையில் இதற்கு எதிப்பு தெரிவித்து மக்கள் பிரதிநிதிகள், காணி உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இதனை அடுத்து தெல்லிப்பளை பிரதேச செயலாளரின் அறிவித்தலுக்கு அமைய அளவீட்டுப்பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert