முடிந்தால் நிரூபித்துக்காட்டுங்கள்

ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் உகண்டா உள்ளிட்ட நாடுகளில் பில்லியன் கணக்கிலான டொலரை பதுக்கி வைத்ததாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தேர்தல்கள் காலங்களில் வெளியிட்ட குற்றச்சாட்டுக்களை நிரூபித்துக் காட்டுமாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஜனாதிபதிக்கு சவால் விடுத்துள்ளார். 

ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தின் போது ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வெளியிட்ட கருத்து ஒன்றை தமது எக்ஸ் தளத்தில் காணொளியாகப் பதிவேற்றி அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். 

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert