September 28, 2024

வடக்கு ஆளுநரும் இரவோடு இரவாக புறப்பட்டார்

வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள் தமது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக அவரது ஆளுநர் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

இன்றிரவு ஊடகங்களிற்கு விடுத்த செய்தியறிவிப்பிலேயே ராஜினாமா பற்றிய அறியத்தரப்பட்டுள்ளது.

கோத்தபாய ராஜபக்சவினால் இறுதி யுத்த கால தகவல் மறைப்பு உள்ளிட்ட போர்க்குற்றங்களை மறைக்க உதவியதற்காக சார்ள்ஸ் ஆளுநராக நியமிக்கப்பட்டிருந்தார்.எனினும் பின்னர் கோத்தபாயவால் தூக்கிவீசப்பட்டுமிருந்தார்.

இந்நிலையில் உள்ளுராட்சி தேர்தலை பிற்போட உதவியமைக்காக ரணிலால் மீண்டும் ஆளுநர் பதவி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert