Juli 1, 2024

யாழில் உள்ள சிறிதரன் எம்.பி யின் வீட்டின் முன்பாக வன்முறை கும்பல்

யாழ்ப்பாணத்தில் அண்மை காலமாக வன்முறை சம்பவங்கள் அதிகரித்து செல்லும் நிலையில் , யாழ்.நகருக்கு அண்மையில் அமைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரனின் வீட்டிற்கு முன்பாக வன்முறை கும்பல் ஒன்று ஆயுதங்களுடன் நடமாடி அச்சுறுத்தும் வகையில் , நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை செயற்பட்டுள்ளனர்,

இலக்க தகடுகள் மறைக்கப்பட்ட நான்கு மோட்டார் சைக்கிள்களில் ஐந்திற்கும் மேற்பட்ட நபர்கள் தமது முகங்களை மறைத்தவாறு , கையில் ஆயுதங்களுடன் நாடாளுமன்ற உறுப்பினரின் வீடு அமைந்துள்ள வீதியில் நடமாடியுள்ளனர். 

இது தொடர்பான காட்சிகள் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமராக்களில் பதிவாகியுள்ள நிலையில் , சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக வீடு உடைப்புக்கள் . வாகனங்களுக்கு தீ வைத்தல் உள்ளிட்ட வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert