Juni 29, 2024

கொழும்பில் அதிபர்கள் ஆசியர்கள் மீது கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம்!

கொழும்பு லோட்டஸ் சுற்றுவட்டத்திற்கு அருகில் போராட்டத்தில்  ஈடுபட்ட  அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்க உறுப்பினர்கள் மீது காவல்துறை கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் செய்துள்ளனர்.

நாடளாவிய ரீதியில் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரிய ஆலோசகர்கள்  இன்று புதன்கிழமை (26) சுகயீன விடுமுறை போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இந்நிலையில்,  அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரிய ஆலோசகர்களின் பங்குபற்றுதலுடன் இன்று முற்பகல் 11 மணிக்கு கோட்டை தொடருந்து நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கடுக்கப்பட்டது.

இந்த கவனயீர்ப்பு போராட்டத்தைக் கலைப்பதற்காக காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட அதிபர்கள், ஆசிரியர்கள் மீது கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகத்தை மேற்கொண்டனர்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert