September 28, 2024

இலங்கையில் பிரபல காலணி நிறுவனத்தின் செயலால் கொந்தளித்த தமிழர்கள்!

 இலங்கையில் உள்ள பிரபல காலணி நிறுவனம் ஒன்று கார்த்திகை பூ பொறிக்கப்பட்ட காலணிகள் விற்பனைக்கு வைத்த சம்பவம் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச் சம்பவம் குறித்த காலனி நிறுவனத்தின் வெள்ளவத்தையில் உள்ள காட்சியறையில் இடம்பெற்றுள்ளது.

மேலும், தமிழர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கார்த்திகைப் பூவை அவர்களின் மனங்களை புண்படுத்தும் வகையில் காலணியில் பயன்படுத்தியமை வடிவமைப்பில் வேண்டுமென்றே உள்வாங்கப்பட்டதா என்ற சந்தேகத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை, குறித்த நிறுவனத்திற்கு இந்த விடயங்களை எடுத்துச் சென்று உற்பத்தியில் இந்த சின்னத்தை தவிர்க்கவும், மேலும் காட்சி அறையில் உள்ள குறித்த காலணிகளை மீளப் பெறவும் நடவடிக்கை எடுக்க தமிழர்கள் சார்பில் அரசியல் தலைவர்கள் முன்வர வேண்டும் என கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert