Mai 2, 2024

யாழில் அதிகரிக்கும் டெங்கு ; போதனா வைத்தியசாலையில் புதிய விடுதிகள் திறப்பு

டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து செல்கின்றமையால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தற்காலிகமான இரண்டு விடுதிகள் திறந்து வைக்கப்பட்டது.

குறித்த தகவலை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

கடந்த ஒரு சில வாரங்களாக அதிகரித்த அளவில் டெங்கு நோயாளிகள் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதில் குறிப்பாக ஆண், பெண் மருத்துவ விடுதிகளில் நோயாளர்கள் படுக்கைகள் இன்றி பெரும் சிரமப்படுகிறார்கள் .இந்த நிலைமையை சமாளிப்பதற்காக மேலும் இரு தற்காலிக மருத்துவ விடுதிகள் திறக்கப்பட்டன என தெரிவித்தார். 

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert