Mai 14, 2024

நைஜீரியாவின் இராணுவத் தளபதி விமான விபதில் பலி!

நைஜீரியாவின் இராணுவத் தளபதி லெப்டினென்ட் ஜெனரல் இப்ராஹிம் அத்தாஹிரு வடமேற்கு மாநிலமான கடுனாவில் நடந்த விமான விபத்தில் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.மோசமான வானிலையில் விமானம் தரையிறங்க முயன்றபோது இந்த சம்பவம் நடந்துள்ளது என்று இராணுவம் தெரிவித்துள்ளது. விமானத்தின் பணியாளர்கள் உட்பட மேலும் 10 அதிகாரிகளும் இறந்தனர்.

ஜனாதிபதி முஹம்மடு புஹாரி இந்த விபத்தால் தான் மிகுந்த வருத்தப்படுவதாக தெரிவித்தார்.

54 வயதான ஜெனரல் அத்தாஹிரு ஜனவரி மாதம் இராணுவத்தின் உயர்மட்ட அதிகாரிகளை மாற்றியமைத்தார்.

இது ஒரு தசாப்தத்திற்கும் மேலான ஜிஹாதி கிளர்ச்சியை எதிர்த்துப் போராடுவதில் இராணுவத்தின் செயல்திறனை அதிகரிக்கும் அரசாங்கத்தின் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

கடுனா சர்வதேச விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கிய நிலையில் இந்த சம்பவம் நடந்ததாக நைஜீரிய விமானப்படை தெரிவித்துள்ளது.

You may have missed