Mai 10, 2024

படம்பிடிக்க ஆசை:ஆள் உள்ளே!

முடங்கியுள்ள இலங்கை தலைநகரை படம்பிடிக்க அனுமதியுமின்றி, ட்ரோன் கமெரா ஒன்றை பறக்க விட்ட இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தெஹிவளை- ரொபட் பிளேஸைச் சேர்ந்த 22 வயது இளைஞரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்றைய தினம் கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் அனுமதியின்றி ட்ரோன் கமராக்களை பறக்கவிடுவது தடை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.