Oktober 23, 2024

சுமந்திரன், சிறீதரனை நிராகரிக்க அழைப்பு?

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் முக்கிய திருப்புமுனையாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சி.சிறீதரன் ஆகிய இருவரிற்கு வாக்களிக்காது புறக்கணிக்கப்போவதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளது சங்கம் அறிவித்துள்ளது.
இன்றைய தினம் வடகிழக்கிலுள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளது சங்கப்பிரதிநிதிகள் மற்றும் மாதர் அமைப்புக்களது பிரதிநிதிகள் யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் ஒன்று கூடியிருந்தனர்.
அவர்கள் ஒன்று கூடி ஆராய்ந்த எடுத்த தீர்மானங்களை யாழ்.ஊடக அமையத்தில் நடத்திய பத்திரிகையாளர் சங்கத்தில் நடத்திய ஊடக சந்திப்பில் உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தனர்.
அவர்களால் உத்தியோகபூர்வமாக விடுக்கப்பட்ட அறிவிப்பிலேயே தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சி.சிறீதரன் ஆகிய இருவரிற்கு வாக்களிக்காது புறக்கணிக்கப்போவதாக அறிவித்துள்ளனர்.
அதேவேளை தமிழ் மக்களையும் காணாமல் ஆக்கப்பட்டோரது குடும்பங்களையும் இவர்கள் இருவரையும் புறக்கணிக்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.