April 20, 2024

சுவிஸில் பட்டபகலில் இத்தாலியர் மீது கொலைவெறி தாக்குதல்!

சுவிட்சர்லாந்தில் இத்தாலியர் ஒருவர் கடுமையாக தாக்கப்பட்ட விவகாரத்தில் பொலிசார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

சுவிட்சர்லாந்தின் பாஸல் பகுதியில் இந்த தாக்குதல் சம்பவம் திங்களன்று மாலை நடந்துள்ளது. தாக்குதலை முன்னெடுத்த நபர் சம்பவயிடத்தில் இருந்து உடனே மாயமானதாக கூறப்படுகிறது.

இந்த தாக்குதல் சம்பவத்தில் படுகாயமடைந்த இத்தாலியரை மீட்டு தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்துள்ளனர்.

தாக்குதல் தொடர்பில் அந்த சந்தேக நபருக்கு சுமார் 40 வயது இருக்கும் எனவும், சுமார் 1.70 முதல் 1.75 வரை உயரம் கொண்டவர் எனவும்,

நீல போலோ சட்டை அணிந்திருந்தார் எனவும் கூறப்படுகிறது. இந்த தாக்குதல் தொடர்பில் தெளிவான காரணங்கள் ஏதும் கண்டறியப்படவில்லை எனவும்,

குற்றவியல் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பில் தகவல் தெரியவரும் பொதுமக்கள் பொலிசாரை நாடவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.