April 26, 2024

சீனாவை முந்திய இந்தியா!

இந்தியாவில், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 90,000-ஐ கடந்துவிட்டது.

இந்தியாவில் கொரோனா தாக்கத்தை கட்டுக்குள் கொண்டுவர பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால், இன்னும் கட்டுக்குள் வரவில்லை. ஒரே நாளில், கொரோனாவால் 4,987 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சீனாவில், 82,947 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியா சீனாவை முந்திவிட்டது.

தற்போது வரை கொரோனாவுக்கு இந்தியாவில் 2,872 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், இன்றுடன் ஊரடங்கு முடிவுக்கு வருகிறது. எனவே நாளை முதலானா ஊரடங்கு சட்டத்திற்கு வழிமுறைகள் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.