Mai 6, 2024

நம்பினால் நம்புங்கள்:நான் பொய் சொல்லாதவன்-சுமா!

 

நான் எந்த இடத்திலும் எந்த பொய்யையும் ஒரு தடவை நான் சொன்னது கிடையாது.மக்களுக்கு உண்மையான நிலைமையை கூறுவதனால் ,பலருக்கு என்னை பிடிக்காமல் இருக்கின்றது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்  ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

சட்டத்தரணி தொழிலிலேயே பொய் சொல்லாதவன் என்ற பெயர் எடுத்தவன் நான் ஆகவே அரசியலில் பொய் சொல்ல வேண்டிய எந்தத் தேவையும் எனக்கு கிடையாது.  குறிப்பாக ஜெனிவா தொடர்பாக பல இடங்களில் பல விளக்கங்களை கொடுத்திருக்கின்றேன்.அதில் கேட்ட கேள்வி அனைத்திற்கும் பதில் கூறியுள்ளேன்.ஆகவே எந்த இடத்திலும் எந்த பொய்யையும் ஒரு தடவை கூட நான் சொன்னது கிடையாது.

மக்களுக்கு உண்மையான நிலைமையை கூறுவது என்பது பலருக்கு பலருக்கு என்னை பிடிக்காமல் இருக்கின்றது. ஏனென்றால் சந்திரனை கொண்டு வருவோம் .சூரியனை கொண்டு வருவோம் என மக்களுக்கு அவர்கள்  தெரிவித்து வருகின்றனர். ஆனால் நான் அவ்வாறு இல்லை. இப்படி தான் என தெளிவு படுத்துகின்றேன்.இவ்விடயம் தான் அவர்களுக்கு கசக்கின்றது என தெரிவித்தார்.