Mai 1, 2024

மின்னல் தாக்கி மரணித்தவருக்கும் கொரோனா!

நேற்று முன்தினம் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் கரைவலைத் தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது இடிமின்னல் தாக்கி உயிரிழந்த மீனவருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் குயின்ரன் சுதர்சன் 38 வயதான மீனவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருந்தார்.

அவரது உடலம் மருதங்கேணி வைத்தியசாலையில் முன்னதாக ஒப்படைக்கப்பட்டிருந்தது.கொரோனா தொற்று உறுதியானதையடுத்து பருத்தித்துறை ஆதாரவைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.