März 28, 2025

அடுத்த மூன்று மாதங்களில் நாட்டில் பிரபல தலைவர் உயிரிழப்பார் – பெண் பிக்குனி அதிர்ச்சி தகவல்

இலங்கையில் அடுத்த மூன்று மாதங்களில் நாட்டை நேசிக்கும் பிரபல தலைவர் ஒருவர் உயிரிழப்பார் என பல்லேகல கோதமி விகாரையின் விகாராதிபதி கோத்தமி பிக்குனி தெரிவித்துள்ளார்.

சிங்கள இணையத்தளம் ஒன்றுக்கு அளித்த நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் இரண்டு வருடங்களுக்குள் மற்றும் ஒரு பிரபலமான தலைவர் படுத்த படுக்கையாகும் கொடூர நோய் ஒன்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழக்க நேரிடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் எதிர்வரும் காலங்களில் எவரும் எதிர்பாராத பல அதிர்ச்சி சம்பவங்கள் இடம்பெறும். பலரின் கனவுகள் கலைந்து போகும். 2050ஆம் ஆண்டிலும் என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியும். எனினும் அவற்றை எல்லாம் நான் கூறப்போவதில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.