Mai 6, 2024

ஐ. நா முன்றலில் ஈழத்தமிழர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

ஐக்கிய நாடுகள் சபை முன்றலில் நேற்றைய தினம் திங்கட்கிழமை ஈழத் தமிழர்கள் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.

தமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டு அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்தி ஐநா முன்பு இன்றையதினம் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தமிழின அழிப்பை வெளிக்கொணரவும், காலத்தின் தேவை கருதிய இக் கவனயீர்ப்பு ஒன்றுகூடலின் அவசியத்தை உணர்ந்து பல மாநிலங்களில் இருந்தும் தமிழர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது