Mai 12, 2025

பிரான்ஸ் தேர்தல் களத்தில் மூன்று தமிழ்ப் பெண்கள்

பிரான்சில் ஜுன் 20 மற்றும் 27 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள மாவட்ட, மாகாணத் தேர்தல்களில் மூன்று தமிழ்ப் பெண்கள் போட்டியிடுகின்றனர்.
உமையாள் விஜயகுமார், பத்ரிசியா சீவரட்ணம், பிரேமி பிரபாகரன் ஆகிய தமிழ்ப் பெண்களே களமிறங்கியுள்ளனர்.
இவர்களை ஆதரித்து வெற்றிபெறச் செய்யுமாறு பிரான்சில் தமிழர் வாழும் பிரதேசங்களில் இணையவழிப் பிரச்சாரங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.