Mai 17, 2024

கொழும்பு துறைமுகம்:அடைவல்ல,தாரை வார்க்கப்படுகின்றது!

கொழும்பு துறைமுகப்பகுதி சீனாவுக்கு அடைவு வைக்கப்படவில்லை தாரை வார்த்து கொடுக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார் விஜயதாச ராஜபக்ச.

கொழும்பு துறைமுகத்திற்கு ஒதுக்கப்பட்ட 1115 ஏக்கர் பகுதியானது சிறிலங்கா சட்டங்களிலிருந்து விலக்களிக்கப்பட்டதாக இருக்கும்.

ஆறு மாதங்கள் அந்தப்பகுதியில் வசிக்கும் ஒருவர், அப்பகுதி வதிவிட உரிமையை இலகுவாக பெறமுடியும்.

ஆனால் போரின்றி இந்தளவு நிலம் பறிபோகிறது எனவும், இதனை தடுக்க இதன் ஊடாக சீனா பலப்படுவதை தடுக்க அமெரிக்கா, யப்பான், இந்தியா ஓரணியில் நிற்கின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.