வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் ஆயருக்கு அஞ்சலி.


வவுனியா – இறம்பைக்குளம் அந்தோனியார் ஆலயத்தில் குறித்த நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது . இதன்போது அன்னாரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி , மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் , கறுப்புக்கொடிகள் பறக்கவிடப்பட்டு துக்கதினமும் அனுஷ்டிக்கப்பட்டது .
இதன்போது கருத்து தெரிவித்த வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் , எமது இனத்திற்காகவும் , நீதிக்காகவும் போராடிய உன்னதமான மனிதராக அவர் இருந்தார் . பாதிக்கப்பட்ட மக்கள் என்ற வகையில் அவரது மரணம் எமக்குப் பேரிழப்பாகவே இருக்கிறது என கருத்து தெரிவித்துள்ளனர்.