März 28, 2025

இருந்தது போன்றே மீள முள்ளிவாய்க்கால் தூபி?

யாழ்.பல்கலைக்கழகத்தில் இடித்தழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு தூபி அதே போன்றே மீள நிறுவப்படும்.அங்கு சமாதான தூபி என்ற பேச்சிற்கெல்லாம் இடமில்லையென தெரிவித்துள்ளனர் யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று செவ்வாய்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் இதனை அறிவித்துள்ள மாணவ தலைவர்கள் இதனிடையே தூபி மீள் நிர்மாணத்திற்கு மக்களது முழுமையான  ஆதரவை கோரியுமுள்ளனர்.