Oktober 18, 2024

ராஜபக்சக்களின் கஸ்ட காலம்:அலரி மாளிகைக்கும் வந்தது?

கோவிட் தொற்று காரணமாக பிரதமரது வதிவிடமா அலரி மாளிகையும் முடக்க நிலைக்கு சென்றுள்ளது.

மகிந்த ராஜபக்ஸவின் வதிவிடமான அலரிமாளிகை பணியாளர்களினை எதிர்வரும் வாரம் கடமைக்கு சமூகமளிக்கவேண்டாமென அறிவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அங்கு பணியாற்றிய அதிரடிப்படையினர் சிலருக்கு ஏற்பட்ட தொற்றினையடுத்து கொரேர்னா எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனினும் கொரோனா தொற்று உள்ளே பரவியமை தொடர்பில் சோதனைகளின் பின்னரே முடிவு தெரியவருமென எதிர்பார்க்கப்படுகின்றது.