Mai 19, 2024

சந்நிதிக்கும் தடை?

நாளைய தினம் தொண்டமனாறு செல்வ சந்நிதி ஆலயத்தில் முன்னெடுக்கப்படவிருந்த உணவு தவிர்ப்பு போராட்டத்திற்கு இலங்கை காவல் துறை நீதிமன்ற படியேறி தடை பெற்றுள்ளது.

நல்லூரில் நினைவேந்தலினை முன்னெடுக்க யாழ்.நீதிவான் நீதிமன்று தடை விதித்திருந்த நிலையில் நாளை செல்வ சந்நிதி ஆலய முன்றலில் உணவு தவிர்ப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இதற்கெதிராக கொழும்பு தலைமை உத்தரவின் பேரில் வல்வெட்டித்துறை காவல்துறை பருத்தித்துறை நீதிமன்றில் தடை உத்தரவை பெற்றுள்ளது.