எஸ்.பி.பி. இன் உடல் நிலை சீராக உள்ளது. மருத்துவமனை மாலை தகவல்.


எக்மோ மற்றும் செயற்கை சுவாச கருவி உதவியுடன் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் மருத்துவ மனை விளக்கம் அளித்துள்ளது.
இதேவேளை, எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தை மாலையில் சந்தித்து விட்டு திரும்பிய அவரது மகன் எஸ்.பி. பி. சரண், தனது தந்தை நினைவுடன் உள்ளதாகவும், தம்மை அடையாளம் கண்டு, சைகை மொழியில் பேசியதாகவும் தெரிவித்துள்ளார்
