Mai 19, 2024

எங்கே சந்திரிக்கா? மௌனத்தின் காரணம் என்ன?

எங்கே சந்திரிக்கா? மௌனத்தின் காரணம் என்ன?

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்வதற்காக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை உரிய முறையில் கடைபிடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அண்மைக்காலமாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தொடர்பில் எந்தவிதமான தகவல்களும் வெளியாகவில்லை.

இது தொடர்பில் சிங்கள இணைய ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள தகவல்களின்படி,

ஜனாதிபதி தேர்தலின் பின்னர் அமைதியான சந்திரிக்கா, ஹொரகொல்லவில் உள்ள தனது வீட்டில் பாதுகாப்பாக உள்ளார். கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து தப்புவதற்கு முன்னாள் ஜனாதிபதி சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை உரிய முறையில் கடைப்பிடித்து வருகிறார்.

கொரோனா பரவல் காரணமாக அவர் சில மாதங்களாக கொழும்பில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்திற்கு வருகைத்தரவில்லை.

ஹொரகொல்லவில் அவர் நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சிகளில் இந்த நாட்களில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.