Oktober 16, 2024

முன்னாள் ஜனாதிபதிகளுக்கான சலுகைகள் : அநுர அரசு எடுத்துள்ள முடிவு

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்படும் வசதிகள் தொடர்பில் ஆராய தற்போதைய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக பொது பாதுகாப்பு அமைச்சினால் அல்லது வேறு ஏதேனும் அமைச்சினால் ஒதுக்கப்பட்டுள்ள வாகனங்களின் எண்ணிக்கையும் ஆராயப்படும்.

 பணியாளர்களின் எண்ணிக்கை

மேலும், ஒவ்வொரு பாதுகாப்புப் பிரிவிற்கும் நியமிக்கப்பட்டுள்ள பணியாளர்கள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்களின் எண்ணிக்கையும் ஆய்வு செய்யப்படும்.அந்த பாதுகாப்புப் பிரிவுகளுக்கு வாடகை அடிப்படையில் கட்டடங்கள் இருப்பின் மாதாந்த வாடகை மற்றும் ஏனைய வசதிகள் தொடர்பில் ஆராயப்பட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளின் உரிமைகள் மற்றும் சிறப்புரிமைகளை மீள்பரிசீலனை செய்வதற்காக அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட குழு இது தொடர்பில் ஆராயும். 

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert