September 18, 2024

பொதுக்கட்டமைப்பின் தீர்மானங்களை ஏற்று நடத்தல் என தீர்மானம்

தமிழ் தேசிய பொதுக்கட்டமைப்பினால் எடுக்கப்படும் தீர்மானங்களை தேர்தல் முடிவடையும் வரையில் கட்டமைப்பில் உள்ள அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூகத்தவர்கள் கடைப்பிடிக்க வேண்டும் என தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 

தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பு யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை விசேட கலந்துரையாடலில் ஈடுபட்ட போதே இந்த தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக தேர்தல் விஞ்ஞாபனத்தை விரைவில் வெளியிடுவது மற்றும் தென்னிலங்கையில் இருந்து வருகின்ற அழைப்புக்களை ஏற்பதா இல்லையா என்பதை ஒருமித்து முடிவெடுப்பது, வடகிழக்கில் தேர்தல் பிரச்சாரங்களை முழு வீச்சில் முன்னெடுப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் எடுக்கப்பட்டது.

இக் கூட்டத்தில்  பொதுக் கட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற அரசியல் கட்சிகளின் தலைவர்கள்  அதன் பிரதிநிதிகள் மற்றும் சிவில் சமூகத்தினர் கலந்து கொண்டிருந்தனர்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert