September 16, 2024

கோபப்படாமல் தீர்ப்போம்:மாவை!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு தலைவர் தெரிவானது கட்சியில் எந்த பிளவினையும் ஏற்படுத்தாத வகையில் இணக்கத்துடன் மேற்கொள்ளப்படும் என மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு தலைவர் பொறுப்பை ஏற்றுக் கொள்வதற்கு செல்வம் அடைக்கலநாதன் முன்வந்துள்ளார்.

அதேவேளை, சித்தார்த்தனும் விடயம் குறித்து எமது கட்சியினுடைய நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கலந்துரையாடி உள்ளதாக அறிகின்றோம்.

எனவே, தமிழ் மக்களிடத்திலும் எங்களது கட்சியிலும் எந்தவித பிளவையும் ஏற்படுத்தாத வகையில் தெரிவு அமைய வேண்டும் என்று மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

எனினும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு தலைவர் பதவியை செல்வம் அடைக்கலநாதனிற்கே  தரவேண்டுமென தமிழீழ விடுதுலை இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஆனால் தற்போது தமிழ் தேசிய கூட்டமைப்பினில்  தமிழீழ விடுதுலை இயக்கம் இல்லாதுள்ள நிலையில் நாடாளுமன்ற குழு தலைவர் பதவியை கோருவது பொருத்தமற்றதென சுமந்திரன் அணியினர் ஆட்சேபித்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert