September 19, 2024

மூடப்பட்டது கௌதாரிமுனை வீதி:போராட்டத்திற்கு அறிவிப்பு

கிளிநொச்சியின் பூநகரியின் கௌதாரிமுனைப்பகுதிக்கான போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக அப்பகுதி பொது அமைப்புக்கள் குற்றஞ்சாட்டியுள்ளன.

எனினும் போக்குவரத்தை சீர் செய்ய மாவட்ட செயலகமோ தொடர்புடைய அரச அலுவலகங்களோ அக்கறையற்றிருப்பதாகவும் அவை மேலும் குற்றஞ்சாட்டியுள்ளன.

கௌதாரிமுனைப்பகுதிக்கு செல்லும் பிரதான வீதியில் புனித அந்தோனியார் ஆலயம் மற்றும் சோழர்கால சிவன் ஆலயத்திற்கருகாக வீதியை மூடி பெருமளவு மணல் குவிந்தமையால் வீதியூடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert