Mai 2, 2024

இருவர் மூன்று தினங்களாகியும் வீடு திரும்பவில்லை!

கல்மடு கடல் பிரதேசத்தில் பைபர் இயந்திரப்படகில் மீன்பிடிப்பதற்காக நேற்று முன்தினம் கடலுக்கு சென்ற இருவர் மூன்று தினங்களாகியும் வீடு திரும்பாத நிலையில், இயந்திர படகுடன் காணாமற்போன இரு மீனவர்களை  தேடி வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கல்மடு பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதுடைய தங்கவேல் தங்கத்துரை மற்றும் 56 வயதுடைய கந்தையா புண்ணியராசா ஆகிய இருவருமே காணாமற்போயுள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் கல்குமடு கடற்கரையில் இருந்து பைவர் இயந்திரப் படகின் மூலம் மீன்பிடிப்பதற்காக கடலுக்குச் சென்ற இந்த இருவரும் வீடு திரும்பாத காரணத்தினால் அவர்கள் தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert