Mai 11, 2024

கோப்பாய் (MOH) கல்வியங்காடு (J/259) பிரிவிற்கான தடுப்பூசி ஏற்றும் பணிகள் ஆரம்பித்தது.

கொவிட் தடுப்பூசி ஏற்றும் பணிகள் யாழ்ப்பாணத்தில் இன்று (30) ஆரம்பமாகியுள்ளன. இதன்படி கோப்பாய் (MOH) கல்வியங்காடு (J/259) கிராமசேவையாளர் பிரிவிற்கான தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை கோப்பாய் பிரதேச வைத்தியசாலையில் ஆரம்பித்துள்ளது.
இங்கு யாழ்.மாவட்ட இராணுவக் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா, வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் ஆகியோரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
நாளைய தினம் (31) இதே கல்வியங்காடு (J/259) கிராமசேவையாளர் பிரிவினருக்கான தடுப்பூசி ஏற்றும் பணி இடம்பெறும்
மூன்றாம் நாள் கோப்பாய் வடக்கு (J/262) பிரிவுக்கான தடுப்பூசி கோப்பாய் பிரதேச வைத்தியசாலையில் ஏற்றப்படும்.
ஐந்தாம் நாள் அச்சுவேலி வடக்கு (J/285) தடுப்பூசி ஏற்றும் இடம் பணிம் இடம்பெறும் இவர்களுக்கான தடுப்பூசி அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் ஏற்றப்படும்.
ஏழாம் நாள் அச்சுவேலி மேற்கு (J/287) தடுப்பூசி ஏற்றும் பணம் இடம்பெறும் இவர்களுக்கான தடுப்பூசியும் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் ஏற்றப்படவுள்ளது.