Mai 10, 2024

வரலாற்றில் முக்கிய நாட்களில் இன்றைய நாள்..!17.05.2009

மேற்குப்பக்கமிருந்து மூர்க்கத்தனமாக முன்னேறி வரும் பகைவனை எதிர்கொள்ள விரும்பாத மக்கள்….வட்டுவாகல் பக்கமாக நகர வேண்டிய சூழ்நிலைக்கும் தள்ளப்பட்டனர்….
அந்தவகையில் மனம் மரத்துப்போனவர்களாக… துயரங்களைச்சுமந்தபடி…குருதியின் ஈரம் காயாத நிலையில் நடைபிணங்களாக நகரத்தொடங்கினர்…
வரலாறு காணாத மக்கள் வெள்ளத்தை வட்டுவாகல் பாலம் சுமக்கத்தொடங்கியது…
காயம்பட்டு வீதியின் அருகில் இருந்தவர்களும் நடந்து செல்ல இயலாமல் தவண்டு தவண்டு நகரத் தொடங்கினர்….
எம் மக்களை வட்டுவாகல் பாதையின் இருமருங்குமிருந்து 50 கலிபர் துப்பாக்கிகள் வேட்டுக்களைத் தீர்த்தபடி வரவேற்றன…
வீதியை விட்டு சற்று விலத்தினால் உயிர் பறிக்கப்படும் நிலை…
அவ்வாறும் நடந்தே விட்டது..அந்த வீதியில் கிடந்த எம் உறவுகளின் உடலங்களைக்கடந்தே மக்கள் செல்ல வேண்டியிருந்தது…
இலையானும் கூடவே….
காயம்பட்ட மேனியுடனும் காயாத குருதியுடனும்
நகர்ந்த மக்கள் வெள்ளத்தை
கம்பி வேலிகள் வரவேற்கத் தொடங்கின…!
இப்போதும் வெடிச்சத்தங்கள் தொடர்ந்து கேட்டுகொண்டே இருந்தது…