Mai 11, 2024

பிறந்த நாளா :உள்ளே தள்ளு!

வடமராட்சி குடவத்தை பகுதியில் பிறந்த நாள் நிகழ்வை நடாத்திய பெண் ஒருவரை இலங்கை காவல்துறையினர், கைது செய்துள்ளதுடன் சில பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.

வடமராட்சி துன்னாலை குடவத்தை பகுதியில் அனுமதியின்றி குடவத்தை பகுதியில் பிறந்த நாள் நிகழ்வு நடாத்துவதாக பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கு கிடைத்த தகவலையடுத்து நேரில் சென்று பார்வையிட்ட போது பிறந்த நாளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  இதனால் பிறந்த நாள் நிகழ்வை  ஏற்பாடு செய்த பெண் ஒருவரை இலங்கை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.