ரிஷாட் பதியுதீன், அவரது சகோதரர் வீடுகள் நள்ளிரவு சுற்றிவளைப்பு – அதிகாலை இருவரும் கைது

 84 Views

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ஆகியோர் இன்று அதிகாலையில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

நள்ளிரவில் அவர்களுடைய வீடுகளை சுற்றிவளைத்த குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கடுமையான சோதனைகளை மேற்கொண்ட பின்னர் இன்று அதிகாலை அவர்களை கைது செய்தனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாகவே அவர்கள் இருவரும் கைதானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ரிஷாட் பதியுதீனை கைது செய்வதற்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் நள்ளிரவில் அவரது இல்லத்தை சுற்றிவளைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், ரிஷாட் பதியுதீனின் சகோதரர் ரியாஜ் பதியுதீனை அவரது வீட்டில் வைத்து குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் கைது செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இருவருடைய வீடுகளும் கடுமையான சோதனைக்ள்ளான நிலையில், அதிகாலையில் அவர்கள் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.