கொரோனா; முதல்முறையாக இத்தாலியில் இறக்கம்; அமெரிக்காவில் ஏற்றம்!
![](https://eelattamilan.stsstudio.com/wp-content/uploads/2020/04/92099392_2845881772165212_7821080255686246400_n-13.jpg)
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றியவர்களின் எண்ணிக்கை 300,000 ஐ தாண்டியது, அத்தோடு இறப்பு எண்ணிக்கை 8,100 ஐ தாண்டியுள்ளது.
இத்தாலியில் வைரஸில் தொற்றினால் இறந்தவர்களின் எண்ணிக்கை 681 அதிகரித்து 15,362 ஆக உயர்ந்துள்ளது, அதே நேரத்தில் தீவிர சிகிச்சையில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை முதல் முறையாக குறைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கா நியூயார்க் மாநிலத்தின் கொரோனா வைரஸ் தொற்றினால் 3,565 இறப்புகளாக உயர்ந்துள்ளது, முந்தைய நாள் 2,93ஆகஇருந்தமை குறிப்பிடத்தக்கது.