September 7, 2024

தம்பி கைதாகி உள்ளே: அருச்சுனா புறப்பட்டார்!

சர்ச்சைக்குரியவராக அடையாளப்படுத்தப்பட்ட மருத்துவர் அருச்சுனா யாழ்ப்பாணத்திலிருந்து நீதிமன்ற பணிப்பின் தொடர்ச்சியாக இன்று வெளியேறியுள்ளார்.

இதனிடையே வடக்கு மாகாண சபை கேட்போர் கூடத்தில் சுகாதார அமைச்சர் ரமேஸ்; பத்திரண, நாடாளுமன்ற உறுப்பினர்கள்,வடக்கு மாகாண ஆளுநர், சுகாதார துறை உயரதிகாரிகள், வைத்தியர்கள் பங்கேற்புடன் இன்று நடைபெற்ற நிகழ்வினுள் அழையா விருந்தாளியாக  பங்கேற்ற ஒருவர் கைதாகியுள்ளார். 

அடக்குமுறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் மு.தம்பிராசாவே, கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் சுகாதார அமைச்சரை சந்திக்க அனுமதி கோரிய சந்தர்ப்பத்தில் கைதாகியுள்ளார்.

யாழ்.கைதடியில் சுகாதார அமைச்சர் பங்கேற்ற கலந்துரையாடலின் போது அத்துமீறி நுழைந்து குழப்பம் விளைவித்த குற்றச்சாட்டின் பேரிலேயே அவரை கைது செய்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது..

அதேவளை குறித்த கலந்துரையாடலில் சாவகச்சேரி வைத்தியசாலை முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனாவும் அழையா விருந்தாளியாக பங்கேற்று முகநூல் நேரலை செய்திருந்தார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert