Mai 17, 2024

தனியே! தன்னந்தனியே!!:டீல்!

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள உலக தமிழர் பேரவையினர் ஜனாதிபதி ரணிலை சந்தித்த பின்னராக தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் தனித்து ரணிலை சந்தித்துள்ளனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்டவர்களை முன்னதாக எம்.ஏ.சுமந்திரனின் ஏற்பாட்டில் உலகத்தமிழர் பேரவையினர் நேற்றைய தினம் சந்தித்துள்ளனர்.

இரா.சம்பந்தனின் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், இரா.சாணக்கியன் இருவரும் பங்கேற்றிருந்தனர்.

இந்நிலையில் இன்றைய தினம் வரவு செலவுத்திட்ட வாக்களிப்பிற்கு முன்னதாக எம்.ஏ.சுமந்திரன், மற்றும் இரா.சாணக்கியன் ஆகிய இருவரும் தனித்து ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துள்ளனர்.

எனினும் கட்சியின் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கோ தலைவருக்கோ தெரியாது நடந்த சந்திப்பு தொடர்பில் சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.

முன்னைய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச மற்றும் உலக தமிழ் பேரவையினரிற்கு இடையே 2021ம் ஆண்டில் நடைபெற்ற இரகசிய பேச்சுக்களின் பின்னணியிலும் எம்.ஏ.சுமந்திரன் மீது குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert